"கிறிஸ்தவத்திற்கு மாறினால் மட்டுமே... ஜீசஸ், பைபிள் இரண்டும்.." ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு

x

கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய நூல் போலியானது என்றும், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பைக் கூட முடிக்காதவர்கள் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார்...அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் "மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாற்றுப் புத்தக" வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு உரையாற்றிய ஆளுநர், மக்களைக் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றவே கால்டுவெல், ஜி.யு போப் ஆகியோர் இந்தியா வந்ததாகவும், இப்படி எல்லாம் சொல்வதால் தனக்குக் கிறித்துவ மதத்தின் மீது எவ்வித வெறுப்பும் கிடையாது... ஏசுவையும் பைபிளையும் பிடிக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்