

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரத்து 238 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று மேலும் 5 ஆயிரத்து 752 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று சுமார் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 102 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது.