TN Police | TN Election | DGP | "டி.ஜி.பி முதல் அனைத்து போலீசாரும்.." பறந்த அதிரடி உத்தரவு

தமிழக காவல்துறையில் உயர் அதிகாரியான டி.ஜி.பி. முதல் காவலர் வரையிலான அனைத்து பணி நிலையில் உள்ள போலீசாரும், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவின் படி, மாநிலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து போலீசாரும் தேர்தல் பணிக்காக அனுப்பப்படுவார்கள் என்றும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அவர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பில் பணியாற்றுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com