கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?

தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

"ஆன்லைனில் பெறப்படும் காணிக்கைகளில் முறைகேடு" - பழனி கோவில் நிர்வாகிகள் புகார்

பழனி முருகன் கோவிலின் இணையப் பக்கத்தை நிர்வகித்து வந்த ஸ்கை என்ற நிறுவனம், ஆன்லைனில் வசூலாகும் காணிக்கை உள்ளிட்டவற்றை, கடந்த சில ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது பழனி கோவிலின் இணையதளப் பக்கம் கடந்த பத்து மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல, ஸ்கை நிறுவனத்தால், நிர்வகிக்கப்படும் திருச்செந்தூர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களின் இணையதள பக்கங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com