தமிழக அரசு அலுவலக நடைமுறைகள், பணப் பரிவர்த்தனையை ஆன்லைனில் செயல்படுத்த வலியுறுத்தி நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அரசு அலுவலர் கூட்டமைப்புக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், காகிதப் பயன்பாட்டை குறைக்கவே அலுவலக நடைமுறைகளை ஆன்லைனில் செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பரிட்சார்த்த முறையில், நடைமுறையில் உள்ள ஆன்லைன் திட்டத்தை கலைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என அதில் கூறப்பட்டுள்ளது.