

இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி அதன் மூலமாக தமிழ் வளர்க்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பதற்காக ஒரு கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதற்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில், ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.