TN Election தமிழக வேட்பாளர்களை பரபரப்பாக்கிய தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அதிரடி அறிவிப்பு
TN Election தமிழக வேட்பாளர்களை பரபரப்பாக்கிய தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அதிரடி அறிவிப்பு
4 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம் அரசு விடுமுறை காரணமாக 4 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கும் நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. அரசு பொது விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்ரல் 1, ஏப்ரல் 3 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது எனவும், வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி கடைசி நாள் எனவும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
