TN Election 2026| வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து.. `லீக்’ ஆனதால் தேர்தல் களத்தில் அதிர்ச்சி
வாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையின் புகைப்படம் வெளியிட்ட விவகாரம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த தொழில்நுட்பப் பணியாளர் யுவராஜ், தேர்தல் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்டதால் அவர் மீது புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுவராஜ் அங்குள்ள மடிக்கணினியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாகப் பார்த்ததோடு, அதனைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பெட்டிகள் வைக்கப்படுவதற்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையின் புகைப்படம் வெளியானது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
