Tiruvarur | கணவனை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்... செய்த தவறுக்கு வசமாக சிக்கிய மனைவி

கணவனை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்... செய்த தவறுக்கு வசமாக சிக்கிய மனைவி

கணவனை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்... செய்த தவறுக்கு வசமாக சிக்கிய மனைவி திருவாரூர் அருகே கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்துறைப்பூண்டி அருகே கடந்த 2ம் தேதி பொன்னிரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் ரத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கபட்டார். விசாரணையில் அவரது மனைவி இந்திராவுக்கும் புஞ்சையூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகருக்கும் தவறான பழக்க வழக்கம் இருந்தது சுப்பிரமணியனுக்கு தெரியவந்ததால், சந்திரசேகரன் அவரை கொலை செய்தது அம்பலமானது. சந்திரசேகரனையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, இந்திராவையும் போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com