

திருவண்ணாமலை செய்யாறில் மாணவர்கள் ஆபத்தான பேருந்தை பயணம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களை, போக்குவரத்து நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்கி, ஆபத்தான இந்த பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.