Tiruvannamalai | தி.மலையை திணறவிட்ட கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்
வார விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசித்ததுடன், 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். பொது தரிசனத்தில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், 50 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்கின்றனர்...
