விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்படுகிறது - மாணவர்கள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அருகே உள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் உணவு தரமற்றதாக வழங்கப்படுகிறது என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்படுகிறது - மாணவர்கள் குற்றச்சாட்டு
Published on

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் அரசு மிகவும் பிற்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் வழங்கப்படும் உணவில், வண்டுகள் மற்றும் புழுக்கள் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல முறை புகார் தெரிவித்தும் புதிதாக விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அந்தோணி ராஜ், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com