திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Published on
திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மின்னழுத்த கோபுரங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் பணியாற்றியதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் ஏழுமலை மற்றும் பன்னீர் செல்வம் மின் கோபுரத்தின் மீது ஏறினர். இருவரும் கீழே இறங்க மறுத்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பிறகு இருவரும், கீழே இறங்கி வந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com