திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பிய ஆடியோ தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் வீடு வழங்கும் திட்டங்களில் தொய்வு இருப்பதாக கண்டிப்பு காட்டியுள்ள அவர், எத்தனை பேரை சஸ்பெண்ட் செய்வேன் என தனக்கே தெரியாது என கோபமுடன் பேசியுள்ளார்.