Tiruvallur | திடீரென கேட்ட பயங்கர சத்தம் - அடுத்தடுத்து சேதமான 10 வீடுகள்.. திருவள்ளூரில் அதிர்ச்சி

திடீரென கேட்ட பயங்கர சத்தம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள கங்கன்தொட்டி குடியிருப்பு அருகே செயல்படும் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது... ஆயிலுடன் கூடிய பழைய இரும்பு பொருட்களை பாய்லரில் உருக்கும்போது வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக குடியிருப்போர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com