"பள்ளியை மேம்படுத்த வேண்டும் என வழக்கு தொடுத்த 2 ஆம் வகுப்பு சிறுமி" - குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவு

பொன்னேரி அருகே குழந்தை தொடர்ந்துள்ள வழக்கில், குறைகளை நிவர்த்தி செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
"பள்ளியை மேம்படுத்த வேண்டும் என வழக்கு தொடுத்த 2 ஆம் வகுப்பு சிறுமி" - குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவு
Published on

பொன்னேரி அருகே மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 2 வகுப்பு பயிலும் அதிகை முத்தரசி என்கிற சிறுமி, தான் படிக்கும் பள்ளியில், கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, சிறுமியை அழைத்து பேசிய நீதிபதிகள், பள்ளிக்கு செல்வதை தவிர்க்க கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் குழந்தை தொடர்ந்துள்ள வழக்கில், குறைகளை நிவர்த்தி செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com