Tiruvallur | ரூ.4 ஆயிரத்திற்கு பெட்ரோல்.. அசந்த நேரத்தில் பறந்த கார் - பகீர் CCTV
ரூ.4 ஆயிரத்திற்கு பெட்ரோல்.. அசந்த நேரத்தில் பறந்த கார் - பகீர் CCTV
Tiruvallur | ரூ.4 ஆயிரத்திற்கு பெட்ரோல்.. அசந்த நேரத்தில் பறந்த கார் - பகீர் CCTV திருவள்ளூர் அருகே பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் காரில் ஓட்டுநர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மப்பேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், காரில் வந்த நபர்கள் முதலில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி, பின்னர் டேங்க் முழுவதும் நிரப்ப கூறியுள்ளனர். இதன்படி, 4,123 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியபின், பணம் செலுத்தாமல் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற ஊழியரை, காரை கொண்டு தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.
