

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள், கடைகளை அடைத்து, இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். சந்தையில், உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் போராட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.