Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி
Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி
Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் வயதான தம்பதியரை கத்தியால் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறரை பவுன் நகையும் பறிமுதல் செய்துள்ளனர். கோவிந்தாபுரம் செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, அவரது மனைவி பாலாமணி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் தண்ணீர் கேட்பது போல நடித்து முதியவரை கத்தியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து பாலாமணி கழுத்தில் இருந்த 7 பவுன் நகையையும் மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
