

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மாபாளையம் பிரிவு முதல் NRG சாலை வரையில் அமைதிப்பேரணியை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கேரளா, ஒடிசா போன்ற 11 மாநில அரசுகள் இந்த சட்டத்தை நாங்கள் அமல் படுத்த மட்டோம் என கூறியது போல், தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.