

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, பூ மார்க்கெட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேறு இடங்களுக்கு கடைகளை மாற்றுவதற்கு அவகாசம் கோரிய நிலையில், நேற்று திடீரென அங்குள்ள கழிப்பறைகளை இடித்ததால், வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.