Tiruppur | Attrocity | ரோட்டில் மோதிக்கொண்ட இளைஞர்கள் | க*சா போதையில் அட்ராசிட்டி

Summary

திருப்பூர் அடுத்த பூச்சக்காடு பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மையப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. பின்னலாடை நகரமான திருப்பூரில், வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வரும் நிலையில், சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com