Tirupattur | "அடிப்படை வசதிகள் இல்லை" - கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாத‌ம்

Tirupattur | "அடிப்படை வசதிகள் இல்லை" - கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாத‌ம்

Tirupattur | "அடிப்படை வசதிகள் இல்லை" - கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாத‌ம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து. வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அங்கு வந்த நாட்றம்பள்ளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com