கடலுக்குள் முத்தெடுப்பது போல் 2 நாளாக மூச்சை பிடித்து மோதிரத்தை தூக்கிய சிப்பி தொழிலாளர்கள்..

கடலுக்குள் முத்தெடுப்பது போல் 2 நாளாக மூச்சை பிடித்து மோதிரத்தை தூக்கிய சிப்பி தொழிலாளர்கள்..
Published on

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே குத்திர பாஞ்சான் அருவியில் குளிக்கும்போது தொலைந்த மோதிரத்தை இரண்டு நாள் தேடுதலுக்கு பின் திருச்செந்தூர் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மீட்டுத் தந்தனர். அந்த அருவியில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளித்தபோது, அவர் அணிந்திருந்த மோதிரம் கைநழுவி காணாமல் போனது. இதையடுத்து, கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு தொலைந்த மோதிரத்தை மீட்டுத் தந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com