திருச்செந்தூரில் அரசு பேருந்துகள் ஓடாததால் பயணிகள் அவதி

திருச்செந்தூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை இயக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூரில் அரசு பேருந்துகள் ஓடாததால் பயணிகள் அவதி
Published on

திருச்செந்தூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை இயக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி ஓய்வு நேரத்தில் பணிமனையில் ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளதால் பேருந்தை இயக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக ஓட்டுநர்களும் நடத்துநர்களும் வேதனை தெரிவித்தனர். திருச்செந்தூரில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் இயங்காததால், பயணிகள் பெரிதும் தவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com