Tiruchendur | Pet Dog | திருச்செந்தூர் அருகே பேரதிர்ச்சி - ஒரே ஊரில் 11 பேருக்கு நேர்ந்த சோகம்

திருச்செந்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் ஒரே ஊரை சேர்ந்த 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழநாலுமூலைகிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவர் வளர்த்து வரும் நாய் அவரது மகன் மணி சர்மாவை கடித்துள்ளது. அப்போது நாயை விரட்ட முயன்ற அனைவரையும் கடித்துள்ளது. 2 சிறுவர்கள், 4 முதியவர்கள் என ஒரே ஊரை சேர்ந்த 11 பேரை கடித்துள்ளது. அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com