

அதிகாலை முதல் முருகனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.அப்போது, சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.முருகப் பெருமான், வள்ளியம்மனுக்கு கீழரதவீதி சந்திப்பில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர், இருவரும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.