கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி! விரட்டி சென்று பிடித்த போலீசார்.. சென்னை ரயில் நிலையத்தில் பரபரப்பு

x

சென்னை ஓட்டேரியில் கட்டிட வேலை செய்துவரும் பீகாரை சேர்ந்த முகமது அஹ்மத் என்பவர் இரவு 11 மணியளவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக பெரம்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர், அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். அப்போது வழியில் இருந்த ரயில்வே போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். அதில் 2 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர். அவர்கள் இருவரும், எருக்கஞ்சேரியை சேர்ந்த 19 வயதான சந்தோஷ் மற்றும் திரு.வி.க நகரை சேர்ந்த 21 வயதான கேசவன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்