இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரெட்லி ஆமை

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரெட்லி ஆமை
Published on

திருச்செந்தூர் அருகே உள்ள ஜீவா நகர் கடற்கரையில் 200 கிலோ எடைகொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரை ஒதுங்கிய ஆமை ஆலிவ் ரெட்லி வகை என்பதும் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனம் என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது .

X

Thanthi TV
www.thanthitv.com