"இங்கதான் கொன்று புதைச்சோம்" - 25 நாட்களுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட உடல்

x

ஓசூரில் நண்பனை தாக்கிய நபரை கண்டித்த பெயிண்டர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தவர்கள் சம்பவ இடத்தை அடையாளம் காண்பித்ததன் அடிப்படையில் 25 நாட்களுக்கு பிறகு புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பெயிண்டரின் சடலத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணைconduct செய்கின்றனர். ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்த அர்ஜுன் திடீரென காணாமல் போனதாக அவரது நண்பர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், 40 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதாக, தனது நண்பரை தாக்கியதற்கு நியாயம் கேட்ட அர்ஜுனை, ராம் நகரை சேர்ந்த மூவர் காரில் கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்