Thenkasi | "எங்களின் ஒரே வாழ்வாதாரம் இதுதான்" - கண்ணீர் மல்க கோரிக்கை
"எங்களின் ஒரே வாழ்வாதாரம் இதுதான்"
#thenkasi "எங்களின் ஒரே வாழ்வாதாரம் இதுதான்" - கண்ணீர் மல்க கோரிக்கை தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடைகளை காலி செய்யாவிட்டால் ஜேசிபி மூலம் அகற்றப்படும் என எச்சரிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கரும்புச்சாறு, இளநீர், பழங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரங்களே தங்களின் ஒரே வாழ்வாதாரம் என்று கூறுகின்றனர். மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் கடைகளை அகற்றினால் வாழ வழியில்லை என்று கூறும் வியாபாரிகள், மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
