திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த தனியார் பேருந்து

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம், அடைந்தனர்.
திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த தனியார் பேருந்து
Published on

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம், அடைந்தனர். வடபாதி மங்கலத்தில் இருந்து திருவாரூர் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திருநாட்டியத்தான்குடி பகுதியில் வரும்போது, எதிரே வந்த லாரி மீது மோதாமலிருக்க திரும்பியுள்ளது. இதனால், அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்ட அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com