Thiruvannamalai நெருங்க முடியாத தூரத்தில் தாயின் உடல் - கலெக்டர் ஆபீஸ் முன் நின்று கதறிய 3 பிள்ளைகள்

குவைத்தில் உயிரிழந்த தாய் - உடலை மீட்கக் கோரி 3 பிள்ளைகள் ஆட்சியரிடம் மனு

குவைத் நாட்டில் உயிரிழந்த தனது தாயின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் மகள்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மன்றாடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆவூர் அடுத்த பன்னியூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவியான சித்ரா குவைத்தில் உயிரிழந்ததாக தெரியவருகிறது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய குடும்பத்தினர், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com