திடீரென அருள் வந்து சாமியாடிய பக்தர்கள்... மயான கொள்ளை விழாவில் பரபரப்பு

x

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர் பகுதியில் செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவைத் தொடர்ந்து மயான கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்காளம்மன் 32 கைகளுடன் மயானத்திற்கு வீதி உலா செல்லும் நிகழ்வின் போது பக்தர்கள் காளி வேடமணிந்து நேர்த்திக் கடன் செய்தனர். பழம்பேட்டை வன்னியந்தல் ஏரியில் உள்ள மயானத்தில் மயான கொள்ளை விழா நடைபெற்றது... பக்தர்கள் நவதானியங்கள், காய்கறிகள், கொழுக்கட்டை, நாணயம் ஆகியவற்றை அம்மனுக்கு கொள்ளை விட்டனர்... அப்போது பக்தர்கள் பலருக்கு அருள் வந்து சாமியாடியதால் பெரும் பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்