தேவையின்றி டூவீலரில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை: வாகனங்களின் மீது பெயிண்ட் அடித்த போலீசார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
தேவையின்றி டூவீலரில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை: வாகனங்களின் மீது பெயிண்ட் அடித்த போலீசார்
Published on
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களின் வாகனங்களில் பெயிண்ட்டை கொண்டு அடையாள குறியீட்டை வரைந்த அவர்கள், மீண்டும் சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீற மாட்டோம் எனவும், தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு என்ற அரசின் வாசகத்தை கூறியபடி அவர்களை உறுதிமொழி ஏற்க வைத்ததோடு வாழைப்பழங்களை வழங்கி அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
X

Thanthi TV
www.thanthitv.com