Thirupattur | விடாமல் ஆக்கிரமித்த நபர்.. அதிரடியாக வந்து இடித்து தள்ளியதால் பரபரப்பு அதிகாரிகள்
மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டடம் கட்டிய நபரால் பரபரப்பு
திருப்பத்தூரில் 2022ம் ஆண்டு ஆக்கிரமிப்பு இடத்தில் கடை இடித்துத் தள்ளப்பட்ட நிலையில், அதே இடத்தில் மீண்டும் கடையை கட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் திரும்பவும் அதே இடத்தில் அண்ணாதுரை என்பவர் கடையை கட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையை இடித்து தள்ளினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு காணப்பட்டது.
Next Story
