தென்காசி - விஷம் அருந்தி காவலர் தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பணிக்கு செல்லாமல் இருந்த காவலர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருமன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். 30 வயதான இவர், சென்னையில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். சில மாதங்களாக இவர் உடலநலக்குறைவால் பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த காவலர் சுந்தர் இன்னும் சில தினங்களில் மீண்டும் பணிக்கு சேர்ந்து கொள்ள உத்தரவு வந்ததாக கூறப்பட்ட நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...."
Next Story
