மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் - தேனியை பரபரப்பாக்கிய சம்பவம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளரை போலீசார் கைது செய்தனர். மயிலாடும்பாறை ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி, அருகிலுள்ள அரசு பள்ளியில் மாணவர் படித்து வருகிறார். மாணவரிடம் விடுதியின் காப்பாளர் ராமச்சந்திரன் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்ததாக கூறபப்டுகிறது. மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராமச்சந்திரனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கைதின்போது உயர் ரத்த அழுத்த கோளாறு ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவமனையில் ராமச்சந்திரனை அனுமதித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com