தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
Published on

தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அமைக்கக்கோரி மத்திய அரசிடம் மனு அளித்துள்ளதாகவும், தீர்ப்பாயம் அமைக்கும் வரை அணை கட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு ஜனவரி 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com