சென்னையை நடுங்கவிட்ட சூறைக்காற்று - கொட்டித்தீர்த்த கனமழை.. அப்படியே மாறிய கதை
கிளாம்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிளாம்பாக்கம், தேசிய நெடுஞ்சாலை, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் சூறைக்காற்றின் காரணமாக சாலையில் உள்ள குப்பைகள், பேனர்கள் காற்றில் பறந்த நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்
Next Story