kovai | மாணவிகள் வைத்த கோரிக்கை..உடனே அமைச்சர் எடுத்த அதிரடி ஆக்ஷன்
மாணவிகள் வைத்த கோரிக்கை..உடனே அமைச்சர் எடுத்த அதிரடி ஆக்ஷன்
கோவையில் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, விடுதி வாசலிலேயே சிறப்பு பேருந்து வசதியை அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்...கவுண்டம்பாளையத்தில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் தங்கி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள், கூட்ட நெரிசல் காரணமாக கல்லூரிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர். விடுதியில் ஆய்வு செய்தபோது அமைச்சர் சம்பத்குமாரிடம், தங்களுக்கென சிறப்பு பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாணவிகள் கேட்டபடியே விடுதி வாசலில் இருந்து, அரசு கலைக் கல்லூரி வரை செல்லும் சிறப்பு பேருந்து சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
