மந்திரங்கள் கூற மைக்கை தொட்ட நொடியில்... ஷாக் அடித்து தூக்கிவீசப்பட்ட அர்ச்சகர் பலி

திருவாரூரில், கோவிலில் மந்திரங்களை கூற முயன்ற அர்ச்சகர்

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஞானசுந்தரம் என்பவர் அர்ச்சகராக பணி புரிந்து வந்தார். கோவிலில் சூரிய வார சிறப்பு பூஜையின்போது, மந்திரங்களை கூறுவதற்காக, ஞானசுந்தரம் மைக்கை எடுத்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயமடைந்த அர்ச்சகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com