வீர வசனம் பேசி இன்ஸ்டாவில் வீடியோ விட்ட இளைஞர் - நைசாக ஸ்டேஷன் வரவழைத்த போலீஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால் விடுத்த இளைஞரை போலீசார் எச்சரித்தனர்.
கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்த முகில் ராஜ் என்பவர் மீது கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடர்புடைய இளஞ்சிறார் ஒருவருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் திரைப்பட பாணியில் முகில்ராஜ் வசனம் பேசி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்து, காவல்நிலையத்திற்கு முகில்ராஜை வரவழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Next Story
