'NO' சொன்ன செவிலியர்.. கொடூரமாக தாக்கிய மருத்துவர் - பிரபல மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில், குழந்தை நல மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரகுவீர். ஆந்திராவை சேர்ந்த இவர், அதே மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதற்கு செவிலியர் மறுப்பு தெரிவித்தால், அவரை மருத்துவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட செவிலியர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்

போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மருத்துவர் ரகுவீரை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்