Sivagangai Issue| சிவகங்கை ரெட்டை கொலையில் அடுத்த `திடுக்’

சிவகங்கை ரெட்டை கொலையில் அடுத்த `திடுக்’

#sivagangaiissue #sivagangaidoublemurder

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது சிவகங்கை அருகே பையூர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில், மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 16-ம் தேதி தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது ஆகாஷ், மணிகண்டன், ராஜகோபால், சபரிவேலன், சுபாஷ் ஆகிய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com