கேமராவில் சிக்கிய காணாமல் போன ‘ரிவோல்டோ’ யானை

மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போனது. அதை தரைவழி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் 40 பேர் கொண்ட குழு இரவு பகலாக தேடுதல் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் பொக்காபுரம் வனப்பகுதியில் வைக்கப்பட்ட கேமராவில், யானை படம் பதிவாகியுள்ளதால், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com