ஹெல்மெட் அணியாததால் நடந்த விபரீதம்...புதிய முறையில் மக்களுக்கு அறிவுரை...

x

பூந்தமல்லி நசரத்பேட்டை நெடுஞ்சாலையில் ஜெயக்குமார், உமாபதி என்ற இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் ஜெயகுமார் பலத்த காயம் அடைந்ததோடு பின்னால் அமர்ந்து வந்த உமாபதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலிசார் ஜெயக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதோடு அந்த வழியாக ஹெல்மட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டுகளிடம் உயிரிழந்தவரின் உடலை காட்டி ஹெல்மெட் அணியுங்கள் இல்லை என்றால் இது போல் கோணி தான் போட்டு மூட வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே உமாபதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்