திருப்பி விடப்பட்ட அரசுப் பேருந்து -திடீர் என்ட்ரியால் தடுமாறிய லாரி... அடுத்தடுத்து இடித்து கொண்ட..

x

திருப்பி விடப்பட்ட அரசுப் பேருந்து -திடீர் என்ட்ரியால் தடுமாறிய லாரி...அடுத்தடுத்து இடித்து கொண்ட வாகனங்கள்

#kacheepuram | #thanthitv

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, சாலை பணிக்காக அரசுப் பேருந்து திசை திருப்பி விடப்பட்டதால், பெரும் விபத்து நிகழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அரசுப் பேருந்து திசை திருப்பி விடப் பட்டதை சற்றும் எதிர்பாராத கண்டெய்னர் லாரி ஒன்று.. அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், லாரியின் மீது பின்னால் வந்த ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மூன்று வாகனங்களும் உருக்குலைந்தன. காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்