கிணற்றில் மிதந்த பிஞ்சு... பேய்களாக மாறிய பாட்டி, தாய் பொள்ளாச்சியை நடுங்க வைத்த கோரம்

x

பொள்ளாச்சி அருகே தகாத உறவில் பிறந்ததாக கூறி, குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசிய வழக்கில், குழந்தையின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மெட்டுவாவி கிராமத்தை சேர்ந்தவர் வித்யாகெளரி. இரு முறை திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், வித்யாகெளரி கர்ப்பம் தரித்த நிலையில், காதலன் கர்ப்பை கலைத்து விடக் கூறி கட்டாயப் படுத்தியதாகவும், குழந்தை பிறந்தால் குழந்தைக்கு தந்தை யார் என ஊரார் பேச்சுக்கு ஆளாக நேரிடும் எனவும் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், வித்யாகெளரியின் தாய், அவருடைய சகோதரியை அழைத்து மகளுக்கு பிரசவம் பார்த்த நிலையில், பிறந்த குழந்தையை மூவரும் கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையை கையிலெடுத்த போலீசார், வித்யாகெளரி, அவருடைய தாய் புவனேஸ்வரி மற்றும் பெரியம்மா பூபதி ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதில், வித்யாகெளரி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு போலீஸ் காவலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்