

புங்கம்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் ,நந்தகுமார் ஆகிய 2 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தனர். இந்நிலையில் விளையாட சென்ற இருவரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்